
இம்மாதம் இரண்டாம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி 105 எதிர்க் கட்சி எம்பிக்கள் பேரணியில் பங்கேற்றனர்.
இந்தப் பேரணி தொடர்பில் போலீசார் பல எம்பிக்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை அறிக்கைகள் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்க பட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி இன்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்துறை அலுவலத்தின் முடிவைப் பொறுத்தது என்று அவர் சொன்னார்.
