
இதற்கு முன்பு இருந்ததைப் போன்று பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் பாணியில் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அஷ்ரப் வஜிடி தெரிவித்தார்.
நோய்த்தொற்றை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அனைத்துக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியதற்கு ஏற்ப அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவை பிரதமர் பதவிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் பின்பற்ற வேண்டும்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராவதற்கு முன் எதிர்கால பிரதமர் மக்களின் சுபிட்சம் தேசிய திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் என்றார் அவர்.
