
மலாய் ஆட்சியாளர்களின் சிறப்பு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் 220 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவை மாமன்னர் இந்த கூட்டத்தில் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எம்பிக்களின் வாக்குகள் மிகவும் நெருக்கமாக இருந்தால் மாமன்னர் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அரசாங்கம், புதிய பிரதமர் யாராக இருந்தாலும், ஒரு சிறிய பெரும்பான்மை மட்டுமே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
