
நாட்டில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக மக்கள் அதிக நேரம் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது.
வீட்டிலேயே அதிக நேரம் செலவழித்தபின் சுமார் 73 விழுக்காடு மலேசியர்கள் தங்கள் வீடுகளை புதுபிக்க விரும்புகிறார்கள்.
சொத்துடைமை கணக்கெடுப்பின்படி 38 விழுக்காடு மக்கள் தங்கள் குடியிருப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை புதுப்பிக்க விரும்புவது கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம் 35 விழுக்காடு மக்கள் ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருக்க அல்லது வேறு இடத்திலிருந்து வீடு வாங்க விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
