
மொத்தம் 114 எம்பிக்களின் ஆதரவை டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பெற்றதைத் தொடர்ந்து அவரை ஆதரிக்கும் எம்பிக்கள் இன்று இஸ்தானா நெகாரா நோக்கி படையெடுத்துள்ளனர்.
114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று கட்டங்கட்டமாக எம்பிக்கள் இஸ்தானா நெகாரா நோக்கி பேருந்துகள் மூலம் சென்றனர்.
114 வாக்குகள் மூலம் பிரதமராக அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தேர்வு செய்யப்பட்டதாக அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ மஸ்லான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று கட்டங்கட்டமாக எம்பிக்கள் இஸ்தானா நெகாராவுக்கு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
