
நாட்டில் covid-19 தொற்றின் விளைவாக நாடும் நாட்டு மக்களும் பரிதவித்துக் கொண்டிருக்கும் இந்தவேளையில் இன்றுடன் அரசியல் சதுரங்க வேட்டைக்கு ஒரு விடை தெரிந்துவிடும் என்று
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் தெரிவித்தார்.
எது எப்படி இருந்தபோதிலும் தமது நாடாளுமன்ற மக்கள் சேவையை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றும் அவர் சூளுரைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக covid-19 பெரும் தொற்றின் விளைவாக பெருவாஸ் நாடாளுமன்ற தொகுதியில் குறிப்பாக இந்தியர்களின் வாழ்வாதாரத்தில் முழு கவனம் செலுத்தி தன்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து கொண்டிருப்பதாகவும் அரசாங்கத்தில் இருந்தால் மட்டும்தான் இதனால் இதையெல்லாம் செய்ய முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
