
நோய்த்தொற்றால் மரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அமைதி பேரணியில் பங்கேற்ற 31 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் பங்கேற்ற 17 ஆண்கள் மற்றும் 14 பெண்களை போலீசார் கைது செய்து பிளேக் மரியா போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இவர்கள் அமைதியான முறையில் ஒன்று கூடியுள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டது முறையல்ல ஆகவே 31 பேரையும் போலீசார் விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கெஅடிலான் மகளிர் பிரிவு உதவித் தலைவி வசந்தி சின்னசாமி கேட்டுக்கொண்டார்.
