
கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பை கவனத்தில் கொண்டு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சிலாங்கூர் மாநில சட்டமன்ற தொடக்க விழா வரும் திங்கட்கிழமை சுருக்கமாக நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளளார்.
சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடக்க விழாவில் சிலாங்கூர் சுல்தானின் அரச உரையை மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்று சட்டமன்ற சபாநாயகர் இங் சூய் லிம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் திட்டமிடப் பட்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் குழு புகைப்பட நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடரில் 200 க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
வருகையாளர்கள் அனைவரும் sop நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் ” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
