
நாட்டில் நோய்தொற்று எண்ணிக்கை மோசமான கட்டத்தில் உள்ளன. மரண எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
ஆகவே புதிய அரசாங்கம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் அவசரகாலத்தை அமல்படுத்த வேண்டுமென்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் இன்று கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
இந்த நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது.
ஆகவே அவசர காலத்தை பிறப்பித்தால் மட்டுமே இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
