
மலேசியா
கோர்வை சிலம்ப கழகத்தை சேர்ந்த ஆசிரியர் S.கவியரசி தொடர்ந்து 14 மணி நேரம் இணைய வழி சிலம்பாட்டம் நடத்தி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனைக்கு வித்திட்ட கோர்வை சிலம்ப கழகத்தின் தலைமை ஆசான் அன்பரசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.
மலேசிய சிலம்ப கழகத்தின் தேசிய தலைமை ஆசான் ராஜகோபால், துணை தலைமை ஆசான் பெரியசாமி,பெட்டாலிங் மாவட்ட தலைமை ஆசான் சந்திரசேகர், மற்றும் பெட்டாலிங் மாவட்ட ஆசிரியர்கள் லோகநாதன், புவனேஸ்வரி, கயல்விழி, டத்தோஸ்ரீ ஜெயபிரகாஜ், மாவேந்தன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
