
புதியப் பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு முழு ஆதரவு வழங்குவதாக டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவித்தார்.
மக்களுக்கு சேவையாற்றும் வகையில் பெரிக்கத்தான் நேஷனலுக்கு உதவும் வகையில் அவருக்கு முழு ஆதரவை வழங்கி இருக்கிறோம்.
நாட்டை மீட்சி திட்டத்திற்கு கொண்டுவர அவர் பாடுபட வேண்டும். மேலும் அவருக்கு முழு ஆதரவை வழங்குகிறோம் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் சொன்னார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்நோக்கியிருக்கும் எம்பிக்கள் அமைச்சரவையில் இடம் பெறக்கூடாது என்ற நிபந்தனையோடு டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு பெரிக்கத்தான் நேஷனல் ஆதரவு வழங்கி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
