
சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் இந்த கூட்டத்தொடரை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி மாநில அரசாங்கம் நோய்த் தொற்றுக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் மீட்சி திட்டங்கள் குறித்து பேசுவார்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் திட்டங்கள் தொடர்பில் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்வார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
