
நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
அந்த வகையில்
தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் மீது உரிய கவனம் செலுத்தப்படாதது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா இன்று வருத்தம் தெரிவித்தார்.
தடுப்பூசி போடும் திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் துரித வளர்ச்சி கண்டு வரும் தொழிலியல் பகுதியாக விளங்கும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஆரம்பக் கட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று சுல்தான் சுட்டிக்காட்டினார்.
இன்று காலையில் 14ஆவது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தமது வருத்தத்தை தெரிவித்தார்.
