
நாட்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவியதிலிருந்து மொத்தம் 4,442 நோய்த்தொற்று திரல் என்னும் தொற்று மையங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
அவற்றில் 1,436 இன்னும் செயலில் உள்ளன என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் உயர் -ஆபத்துள்ள குழுக்களை உள்ளடக்கிய மொத்தம் 24 புதிய நோய்க்தொற்று திரல் மையம் நேற்று பதிவு செய்யப்பட்டன. ஜோகூரில் நான்கு பணியிட தொற்று மையம் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், மற்ற மூன்று மலாக்காவில் இருந்ததாகவும் காட்டுகிறது.
கோலாலம்பூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் கிளாந்தான் ஆகிய இடங்களில் தலா ஒரு தொற்று மையம் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
