
கிள்ளானில் செயல்பட்ட ஐந்து தடுப்பூசி மையங்களை முடுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேட்டுக்கொண்டுள்ளார்கிள்ளான் பிரிமியர் ஹோட்டல், ஹாக்கியன் மண்டபம், சாக்கோ காக்காய் மண்டபம், கிளப் டிஎன்பி மற்றும் பண்டமாரான் ஆகிய இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன.
இந்த ஒவ்வொரு தடுப்புசி மையத்திலும் தினசரி 8,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டி இருப்பதால் இந்த ஐந்து தடுப்புசி மையங்களும் செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
