
தேசிய தடுப்பூசி திட்டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த 741 தனியார் கிளினிக்கில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிள்ளானில் 5 தடுப்பு மையங்கள் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 741 தனியார் கிளினிக்கில் தடுப்பூசி போடுவது ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பில் மலேசிய மருத்துவச் சங்கம் இதற்கு முன்னர் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில் தனியார் கிளினிக்கில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவது நியாயம் இல்லை என்று எஸ்.பி. கேர். மருத்துவக் குழுமத்தின் தோற்றுநர் டாக்டர் சத்யா பிரகாஷ் நாராயணன் குறிப்பிட்டார்.
