
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெறும் பெர்சத்து கட்சி அமைச்சர்கள் யார் என்பதை கட்சி தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முடிவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இடையே நெருங்கிய நட்பு உள்ளது. பிரதமராக பதவியேற்ற முதல் நாளே டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வீட்டுக்குச் சென்று பல விவகாரங்களை டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கலந்து ஆலோசித்தார்.
அந்த வகையில் புதிய அமைச்சரவையில் பெர்சத்து கட்சி சார்பில் இடம்பெறப்போகும் அமைச்சர்கள் யார் என்பதை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முடிவு செய்வார் என்று கட்சி அறிவித்துள்ளது.
