
ஜப்பான் தோக்கியோவில் நடைபெறும் பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியர்கள் வெற்றிபெற வாழ்த்துவோம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி வேண்டுகோள் விடுத்தார்.
இன்று தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் மலேசியர்கள் வெற்றியோடு நாடு திரும்ப வேண்டும்.
1972 ஆம் ஆண்டு முதல் பரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் மலேசியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட மொத்தம் பதினொரு பதக்கங்களை வென்றுள்ளது.
அந்த வகையில் இம்முறை மலேசியா கூடுதல் பதக்கத்தை வெல்ல நாம் வாழ்த்துவோம் என்றார் அவர்.
