
பொதுமக்களுக்கு என்று அமைக்கப்பட்டிருக்கும் பொது தடுப்பூசி மையம் அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போட ஒரு சிறப்பு தடுப்பூசி மையம் அமைக்கப்பட வேண்டும்.
அந்த சிறப்பு தடுப்பூசி மையத்தின் வழி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது, இந்த நடவடிக்கையானது மாணவர்கள் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்க வழிவகுக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட அல்லது மண்டப ரீதியாக பல பள்ளிகளைக் கொண்ட தடுப்பூசி மையம் உருவாக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சிக்கு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்த நடவடிக்கையின் வழி பள்ளி மாணவர்கள் பல கட்டங்களாக தடுப்பூசிகளைப் பெறுவதை எளிதாக்கும் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
