
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைய மாட்டோம். தொடர்ந்து சுயேச்சையாக செயல்படுவோம் என்று பார்ட்டி பெர்சத்து சரவா அறிவித்துள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்கு பார்ட்டி பெர்சத்து சரவா ஆதரவு வழங்கியது.
இருப்பினும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைய மாட்டோம்.
பல இன மக்களை பிரதிநிதிக்கும் கட்சியாக பார்ட்டி பெர்சத்து சரவா தொடர்ந்து செயல்படும் என்று அதன் தலைவர் வோங் சூன் கோ தெரிவித்தார்.
