
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு எதிராக நம்பிக்கை தீர்மானம் உடனடியாக நடத்த தேவை இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
போதுமான ஆதரவை பெறுவதில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தோல்வி கண்டால் அனைத்துலக அரங்கில் மலேசியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை கொண்டுவரும்.
ஆகவே இப்போது மீண்டும் ஒரு பிரதமரை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
மேலும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை தீர்மானம் இப்போதைக்கு அவசியம் இல்லை என்று கருதுவதாக அவர் சொன்னார்.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் போதுமான ஆதரவை பெறத் தவறினால் இன்னொரு பிரதமரை மாற்ற வேண்டியிருக்கும்.
அப்போது உலகம் நம்மை பார்த்து சிரிக்கும் என்றார் அவர்
