
பகாங் மாநிலத்தில் இன்னிசை இரவு விடுதி மற்றும் சூதாட்ட மையங்கள் வேண்டாமென்று பாஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அண்டன்சுரா என்பவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது மக்கள் நடமாட்ட உத்தரவால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன.
இன்னிசை இரவு விடுதிகள் மற்றும் சூதாட்ட மையங்கள் மூடப்பட்டிருப்பதால் மக்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
குடிபோதையில் சண்டை போடுவது இல்லை. பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை.
அகவே பகாங் மாநிலத்தில் இன்னிசை இரவு விடுதி மற்றும் சூதாட்ட மையங்கள் வேண்டாம் என்பதில் புதிய கொள்கையை மாநில அரசு வகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



