
புதிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் நியமிக்கப்பட வேண்டும் என்று சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முக்கிய பதவிக்கு மகளிர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் சொன்னார்.
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியின்போது இயோ பி யின் வகித்த அமைச்சர் பதவியை பின்னர் 3 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் உள்துறை அமைச்சர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றார் அவர்.
