
ஆசிய ரீதியில் நடைபெற்ற பிசியோதெரபி மருத்துவத் துறையில் மலேசியாவைச் சேர்ந்த ஹேமமலர் பத்மநாதன் பிளஸ் ஹெல்த் கேர் தலைமைத்துவ விருதை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
பல நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் தலைமைத்துவ விருதை வென்று இருக்கும் இவருக்கு சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை சார்பில் அதன் தலைவர் மு.சு. மணியம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஹேம மலர் பத்மநாதன் சிலாங்கூர் இந்திய விளையாட்டு பேரவையின் விளையாட்டு பகுதி செயலவை உறுப்பினராகவும் இருக்கிறார்.
பிசியோதெரபி துறையில் சிறப்பான அனுபவம் பெற்றிருக்கும் இவர் மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.
