
நாட்டின் சுதந்திர தினத்தை குடும்ப விழாவாக முழு ஈடுபாட்டுடன் இணைந்து கொண்டாடுவோம் என்று
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
இந்த உன்னத தினம் ஒருமாதக் கொண்டாட்டமாக நடைபெறுகிறது.
இந்த நன்னாள் நெருங்கி வரும் இந்த வேளையில் இந்திய சமூகத்தினர் அனைவரும் தேசிய தினத்தைத் தங்களின் திருவிழாவாக, குடும்ப விழாவாக மதித்து முழு ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்
