
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கோவிட் -19 தாக்கத்தினால் மக்கள் எதிர்நோக்கி வரும் சுகாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,அரும்பணியாற்றி வரும் முன்களப் பணியார்களின் சேவை பாராட்டுக்குரியது.
பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பிரேதங்களை அடக்கம் செய்வது,உணவுகளை அனுப்பி வைப்பது போன்ற துறைகளில் அவர்களின் சேவை மிகவும் பெரியது என மாட்சிமை தங்கிய பேரா சுல்தான்,சுல்தான் நஸ்ரின் ஷா தெரிவித்தார்.
அனைத்து மருத்துவர்கள், தாதியர்கள்,சுகாதார பணியாளர்கள்,ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அனைவரும் நாம் எதிர்ப்பார்ப்பதை விட அதிகமாகவே பொறுப்புடன் தங்கள் பணியை செய்கிறார்கள் என்று பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
