
மலேசியாவுக்கு வரும் இந்தியா இலங்கை பாகிஸ்தான் வங்காளதேசம் மற்றும் நேப்பாளத்தைச் சேர்ந்த பிரஜைகள் 14 நாட்கள் மட்டுமே தனித்திருக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கிள்ளான் கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கேபி சாமி இன்று ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

முன்பு இவர்கள் இருபத்தொரு நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போது 14 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது என்று தங்கள் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்றார் அவர்.
