
தோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையாக இவர் விளங்குகிறார்.
இந்நிலையில், முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, பி.வி.சிந்துவுக்கு விருந்துடன் கூடிய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகை ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு பி.வி.சிந்துவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
