
புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இடையில் நடைபெற்ற சந்திப்பு நல்ல அறிகுறியை காட்டுவதாக டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
இந்த சந்திப்பானது அனைத்து மக்களுக்கும் நல்ல செய்தியாகும் என்று அவர் சொன்னார்.
அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அஷ்ரப் வஜிடி கூறுகையில் ஒரு நிலையான அரசாங்கம் அமைவதோடு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த இந்த சந்திப்பு உதவும் என்று தெரிவித்தார்.
