
பக்காத்தான் ஹரப்பானில் உள்ள அனைத்து கட்சிகளும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைத்துவத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க முன் வந்திருப்பதை பெரிதும் வரவேற்பதாக எம்பிபிஜே கவுன்சிலர் சுரேஷ் தெரிவித்தார்.
மக்களின் நலன் கருதி சீர்திருத்த போராட்டத்தின் கொள்கைக்கு ஏற்ப ‘அகண்ட தலைமைத்துவம்’ என்ற கருத்தின் கீழ் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள
கெஅடிலான், ஜசெக மற்றும் அமானா கட்சிகள் முன் வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
இதன் மூலம்
அடுத்த பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு மகத்தான வெற்றிபெற நாம் கடுமையாக உழைக்கலாம்.
மேலும் மக்கள் ஆதரவோடு மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கைப்பற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
