
சிலாங்கூர் மாநில கிந்தா உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 395 பேறு குறைந்தவர்களுக்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்டிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பேறு குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் 6 லட்சம் வெள்ளியை சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 395 பேறு குறைந்தவர்களுக்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் அன்னா வாரிசான் அறவாரியத்தின் நிர்வாகி கன் பெய் நீ தெரிவித்தார்.
மொத்தம் 1,200 பேறு குறைந்தவர்களுக்கு தலா 500 வெள்ளி நிதியை வழங்க மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக அவர் சொன்னார்.
