
ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் ஒரு மின்சுடலை அமைக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இன்று சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தினார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தன. இதனால் உடல்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத சூழலை மின்சுடலைகள் எதிர்நோக்கின. இப்போது ஐந்து ஊராட்சி மன்றங்களில் மட்டுமே மின் சுடலை கள் உள்ளன.
மின்சுடலைகள் பற்றாக்குறை காரணமாக , ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் ஒரு மின்சுடலை அமைக்கப்பட வேண்டும்.
மேலும் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
