
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
புதிய அமைச்சரவை பட்டியல் ஒப்புதல் பெறுவதற்காக பகாங் குவாந்தானில் மாட்சிமைத் தங்கிய மாமன்னரை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை நாட்டின் பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் புதிய அமைச்சரவைப் பட்டியலை தயாரித்து உள்ளார்.
புதிய அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதற்காக இன்று மாமன்னருடன் பிரதமர் மூன்று மணி நேரம் சந்திப்பு நடத்தியுள்ளார்.
