
நேற்று நாட்டில் ஒரே நாளில் நோய்த்தொற்று எண்ணிக்கை பெரும் உச்சத்தை தொட்டது.
நேற்று மட்டும் 24,599 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் 393 மரண சம்பவங்களினால் மலேசியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நாட்டில் நோய்த் தொற்றினால் 15,211 பேர் பலியாகி உள்ளனர்.
நாடு முழுவதும் 2 லட்சத்து 68 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் 999 பேர் சுவாசக் கருவிகள் உதவியோடு சிகிச்சை பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
