
நாட்டின் ஒன்பதாவது பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தனது அமைச்சரவைப் பட்டியலை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
துணைப் பிரதமராக அவர் யாரையும் நியமிக்கவில்லை.
தனது அமைச்சரவையில் நான்கு பேரை மூத்த அமைச்சர்களாக நியமனம் செய்திருக்கிறார்.
அம்னோ சார்பில் டத்தோஸ்ரீ இஷாமுடின் பெர்சத்து சார்பில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ரஸ்டி ஜிடின் மற்றும் சரவா ஜிபிஎஸ் சார்பில் படிலா யூசோப் ஆகியோர் மூத்த அமைச்சராக இடம் பெற்றுள்ளனர்.
