
அம்னோ கட்சியை சேர்ந்த டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அமாட் புதிய அமைச்சரவையில் மீண்டும் உயர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த அமைச்சரவையிலும் இவர் உயர் கல்வி அமைச்சராக இருந்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அம்னோ எம்பிக்கள் அறிவித்தபோது இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் இவர் மீண்டும் உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
