
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 31 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்.
இன்று மதியம் 2:30 மணிக்கு மேல் இஸ்தானா நெகாராவில் நடைபெறும் பதவியேற்பு சடங்கில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் முன்னிலையில் மொத்தம் 69 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள் .
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்கள் இப்போது மீண்டும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
