
நாட்டில் நோய்த் தொற்றினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு பல தொண்டூழிய அமைப்புகள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்கள் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் பிஆர்டி சமூக நல இயக்கம் வசதி குறைந்த மக்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகளை வழங்கி வருவதாக அதன் தலைவர் டாக்டர் சுரேஷ் வீரசிங்கம் தெரிவித்தார்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த விஜயன், பத்மநாதன், யுவராஜ், ஜேக்கப் ஆகியோரும் பெரும் உதவி புரிந்து கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
நாட்டின் 64ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு தேசியக் கொடிகளை
பி.ஆர் டி சமூக நல இயக்கம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
