
சாலை வரி மற்றும் வாகனம் ஓட்டும் லைசென்ஸ் புதுப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இன்று தெரிவித்தார்.
காலாவதியான சாலை வரி மற்றும் வாகனம் ஓட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றார் அவர்.
இருப்பினும் இவர்கள் முறையான வாகன காப்புறுதியை வைத்திருக்க வேண்டும்.
போலீஸ் சோதனையின்போது காப்புறுதி சான்றிதழை அவர்கள் காண்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
