
வரும் அக்டோபர் 3ஆம் தேதி நாட்டில் உள்ள பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரஸ்டி ஜிடின் தெரிவித்தார்.
பள்ளிகள் திறக்கப்படும் போது Sop விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
கடந்த ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போது நோய்த்தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்தது.
ஆனால் இப்போது நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடப்படுகிறது.
சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர், புத்ரா ஜெயா ஆகியவை தற்போது முதலாம் மீட்சி திட்டத்தில் இருப்பதாக அவர் சொன்னார்.



