
ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற கொள்கையை பின்பற்றினால் இந்தியாவில் மக்கள் தொகையை குறைக்க முடியும் என்று இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
எனது தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, ‘ஒரு குழந்தை கொள்கையை’ ஆதரிக்கிறது.
இந்த கொள்கையை பின்பற்றினால் மக்கள் தொகையை குறைக்க முடியும்.
இதற்காக ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை’ உறுதிசெய்யும் சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டும். பிரதமர் மோடியை சந்தித்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை கொண்டு வர எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
