29.5 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக்கூடாது

ஆப்கானிஸ்தானை பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலய் கேட்டுக் கொண்டார். தலைநகர் டில்லியில் ரஷ்ய தூதர் நிகோலய் குடாஷேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கனிஸ்தான் திகழகூடாது என்று எச்சரித்தார் இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் நிலவரம் கவலை அளிக்கிறது. ஆசிய மண்டலத்தில் உள்ள நாடுகளுக்கு பயங்கரவாதத்தை பரப்ப உதவும் நாடாக ஆப்கானிஸ்தான் மாறக்கூடாது. பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதை ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து சமாளிக்கும். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேசி வருகின்றன என்று அவர் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles