29 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

அடுத்த பொதுத் தேர்தலிலும் கெஅடிலான் சின்னம்

நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தலில் கெஅடிலான் கொடி சின்னம் பயன்படுத்த வேண்டும் என்று விலாயா மாநிலத்தைச் சேர்ந்த 12 கெஅடிலான் தொகுதிகள் கேட்டுக் கொண்டுள்ளன. விலாயா மாநிலத்தைச் சேர்ந்த கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்ட பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர்கள் அமோக வெற்றி பெற்றனர். அந்த வகையில் வரும் பொதுத் தேர்தலிலும் கெஅடிலான் சின்னம் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கெப்போங் கெஅடிலான் தொகுதி தலைவர் எம் ஜெயக்குமார், புக்கிட் பிந்தாங் தொகுதி தலைவர் லோகேஸ்வரன் மற்றும் செபூத்தே தொகுதி தலைவர் மகேந்திரன் ஆகியோரும் இதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles