
வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை தீர்மானம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் தெரிவித்தார். மாமன்னர் உத்தரவு பிறப்பித்ததைபோல் பிரதமர் மீது நம்பிக்கை தீர்மானம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத இது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக அவர் சொன்னார். மேலும் நாடாளுமன்ற சபாநாயகரை மாற்றும் தீர்மானமும் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
