
வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்களில் படம் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 50 விழுக்காடு எண்ணிக்கையில் தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தியேட்டரில் படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். படப்பிடிப்பு,மேடை நாடகம், இசை நிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் ஆகியவற்றையும் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதாக அவர் சொன்னார்.
