
கெஅடிலான் கட்சியை வலுப்படுத்துவதிலும் கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் தெரிவித்தார். கோவிட் காலகட்டத்தில் சில மாதங்களாக கட்சி உறுப்பினர்களை ஒரே நேரத்தில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அனுமதி இல்லாத பட்சத்தில் எப்படி நாம் அவர்களை நிகழ்ச்சியின் வழி சந்திக்க முடியும் என்று அவர் கேள்வியை எழுப்பினார். இதுதான் பிரச்சினை என்றால் நான் அவர்களை கட்டங்கட்டமாக சந்திக்க முடிவு செய்திருப்பதாக அவர் சொன்னார்.
