
நாட்டிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்பது தொடர்பில் வரும் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். வரும் வியாழக்கிழமை கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இடையில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் முன்வைக்கப்படும் என்று அவர் சொன்னார்.
