
நாட்டில் நேற்று ஒரே நாளில் 311பேர் நோய்த்தொற்று தாக்கத்தினால் பலியாகினர். இதுவரை நாட்டின் இந்த கொடிய நோய் தொற்றினால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 18,802 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் நாட்டில் 18,547 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. சரவாக் மாநிலத்தில் 3,200 சம்பவங்களும் சிலாங்கூர் மாநிலத்தில் 2,407 சம்பவங்களும் பதிவாகியுள்ளன சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
