
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது புதல்வர் டத்தோ முகமட் நஸிபுடின் 170 கோடி வெள்ளி வரிப்பணத்தை செலுத்த வேண்டும் என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களுக்கு எதிராக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை தள்ளுபடி செய்யக்கோரி செய்த விண்ணப்த்தையும் அப்பீல் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு 10,000 வெள்ளி செலவுத் தொகையாக இவர்கள் செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
