
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் தொடர்ந்து மாநில கெஅடிலான் தலைவராக இருப்பார் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நெகிரி செம்பிலான் மாநில கெஅடிலான் உச்சமன்ற கூட்டத்தில் இந்த முடிவு காணப்பட்டதாக அவர் சொன்னார். இருப்பினும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கெஅடிலான் கட்சியை அவர் வலுப்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்பட்ட கெஅடிலான் கட்சி உட்பூசலுக்கு நேற்று தீர்வு காணப்பட்டது.
